கருணா அம்மான் கைது; கம்மன்பில ‘அதிருப்தி’!
எத்தனையோ பாரதூர குற்றச்சாட்டுகள் புரிந்தவர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட சிறு குற்றச்சாட்டின் கீழ் கருணா அம்மான் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள உதய கம்மன்பில குறித்த நடவடிக்கை சந்தேகத்தை உருவாக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பொலிஸ் விசேட அதிரடிப்பிரிவின் கட்டளைத் தளபதி கைது சிறையில் அடைக்கப்பட்டமையும் சிக்கலானது எனவும் அரசாங்கம் எதற்காக இவ்வாறு செய்கிறது என்பது தொடர்பில் தாம் சந்தேகத்துடனேயே பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.