யாருக்கு விற்றாலும் எங்கள் ஆட்சியில் பார்த்துக் கொள்ளலாம்: மஹிந்த
ஹம்பாந்தோட்டை விவகாரம் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில் அரசாங்கம் எந்தத் திட்டத்தை யாருக்கும் விற்றாலும் குத்தகைக்கு விட்டாலும் எங்கள் ஆட்சியில் அதைப் ‘பார்த்துக் கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.
துறைமுக ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் நியாயமானது எனவும் தாம் அதற்கு பூரண ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ள அவர், இன்று பிரதமரை சந்தித்து இது குறித்து பேசியதாகவும் தெரிவித்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.