எக்னலிகொட வழக்கில் கைதானவர் மீண்டும் இராணுவ சேவையில்
பிரகீத் எக்னலிகொட காணாமல் போன விவகார வழக்கில் வைது செய்யப்பட்டிருந்த இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் நேற்று முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளார்.
சுமார் ஒரு வருட காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஷம்மி குமாரரத்னவுக்கு அண்மையில் பிணை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே அவர் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.