சீன உதவியில் மூன்று தொழிநுட்பக் கல்லூரிகள்
சீன அரசின் நிதியுதவியோடு கிராமப் பகுதி மாணவர்களைக் கருத்திற்கொண்டு மூன்று புதிய தொழிநுட்பக் கல்லூரிகள் அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்ட, புத்தளம், மொனறாகல பகுதிகளிலேயே இவ்வாறு தொழிநுட்ப கல்லூரிகள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவற்றிற்கு லங்கா-சைனா டெக் என பெயரிடப்படவுள்ளதாகவும் அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் முன்னெடுப்பிலேயே இம்முயற்சி கைகூடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.