மோதலினால் தடைப்பட்ட கிண்ணியா உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவின் இறுதிக் கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி நேற்று(25) கிண்ணியா எழிலரங்கு மைதானத்தில் இடம் பெற்றது.
நோவா மற்றும் டிஸ்கோ அணியினருக்கிடையில்நடை பெற்ற இப்போட்டி இரண்டுக்கு ஒன்று என்ற அடிப்படையில் இடை வேலையின் பின் மைதானத்தில் நடுவர் குழாமுக்கு தாக்குதல் நடாத்த முற்பட்டதன் காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது.
கைகலப்பின் பின் பொலிஸாரும் இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் இறுதியில் இப் போட்டி தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இப் போட்டியை கிண்ணியா உதைப்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது.
(இஹ்ஸானா- பரீத்)