ஆட்சிக் கவிழ்ப்பு; மஹிந்தவின் ‘பகற்கனவு’: எஸ்.பி
2017ம் ஆண்டு ஆட்சியைக் கவிழக்கப் போவதாக மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பது பகற்கனவு என தெரிவித்துள்ளார் எஸ்.பி. திசாநாயக்க.
இவ்வருடம் அரசியலில் மாற்றம் ஒன்று வருமானால் அந்த மாற்றத்தைக் கொண்டுவருபவர்கள் ஜனாதிபதியும் பிரதமருமாகவே இருப்பார்களே தவிர, மஹிந்த ராஜபக்சவால் அரசியலில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது எனவும் தெரிவித்துள்ள அவர், பொதுத் தேர்தல் ஒன்றை வெல்லும் சக்தி மஹிந்தவுக்கு இல்லையெனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.