வவுனியா: சட்டவிரோத வெடிபொருட்கள் பொலிஸ் வசம்!
வவுனியாவுக்குள் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட வெடிபொருட்கள் தொகையொன்றைக் கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியொன்றில் வைத்து மதவாச்சியிலிருந்து இவ்வெடிபொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் வவுனியாவில் இவற்றை விற்பனை செய்ய முயன்றிருந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.