திருகோணமலை மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான கலந்துறையாடல் முள்ளிநியூஸ்

திருகோணமலை மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான கலந்துறையாடல்



தேர்தல் வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கான நிலையத்தினால் தேர்தல் பிரசார நிதியை வரையறுத்தல் மற்றும் சொத்துக்கள் பிரகடனம் தொடர்பான கலந்துரையாடல் இன்று (31) திருகோணமலை ஜெகப் ஹோட்டலில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டத்தில் சமூக சேவைகளில் அக்கறை கொண்ட கிராம மட்டத்தில் செயற்பட்டு வருகின்ற சங்கங்களின் பிரதி நிதிகளை தெரிவு செய்து தேர்தல் தொடர்பில் சொத்துக்கள் மற்றும் கடன் பொறுப்புச்சட்டம் .சொத்துக்கள் மற்றும் கடன்கள் வௌியீட்டு பிரதிகளை பெற்றுக்கொள்வதற்கான உரிமை,சொத்து மற்றும் கடன் வௌியீடு தொடர்பான சட்டத்தில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகள்.தொடர்பாகவும் தௌிவூட்டப்பட்டது.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சஜித் வெல்கம மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவத்தி கலப்பத்தி மற்றும் டிரான் பேரன்சி இன்டனெஸனல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான செயற்பாட்டாளர் ஷான் விஜயதுங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
c-jpg2

(இஹ்ஸானா- பரீத்)
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW