பொதுபலசேனாவுக்கான பதில் கடிதத்தை ACJU நேரடியாக அனுப்பாது: இணையத்தில் வெளியிட தீர்மானம் முள்ளிநியூஸ்

பொதுபலசேனாவுக்கான பதில் கடிதத்தை ACJU நேரடியாக அனுப்பாது: இணையத்தில் வெளியிட தீர்மானம்


பொது­ப­ல­சேனா அமைப்பு குர்ஆன் அத்­தி­யா­யங்கள் சில­வற்றைக் குறிப்­பிட்டு அதற்­கான விளக்­கங்­களைக் கோரி அகில இலங்கை ஜம்­இ­யத்துல் உலமா சபைக்கு அனுப்பி வைத்­தி­ருந்த கடி­தத்­துக்­கான பதிலை நேர­டி­யாக பொது­ப­ல­சே­னா­வுக்கு அனுப்பி வைப்­ப­தில்லை என அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா சபை தீர்­மா­னித்­துள்­ளது.

பொது­ப­ல­சே­னாவின் கேள்­வி­க­ளுக்­கான பதில்­க­ளுடன் குர்ஆன் தொடர்­பான மேல­திக விளக்­கங்­க­ளையும் உலமா சபையின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­த­ளத்தில் வெளி­யி­டு­வ­தென்றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

நேற்று முன்­தினம் அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா சபையின் தலை­மை­ய­கத்தில் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தலை­மையில் நடை­பெற்ற செயற்­கு­ழுக்­கூட்­டத்­தி­லேயே இத் தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

இது தொடர்பில் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்­தியை தொடர்பு கொண்ட வின­வி­ய­போது அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

‘பொது­ப­ல­சேனா கடந்த மாதம் உலமா சபைக்கு அனுப்பி வைத்­தி­ருந்த கடி­தத்­துக்­கான பதில் பொது­ப­ல­சே­னா­வுக்கு நேர­டி­யாக அனுப்பி வைக்­கப்­ப­ட­மாட்­டாது. உலமா சபையின் இணையத் தளத்­தி­லேயே வெளி­யி­டப்­படும். அதன் பின்பு கேள்­வி­க­ளுக்­கான பதில்­களும் தெளி­வு­களும் இணை­யத்­த­ளத்தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தாக பொது­ப­ல­சே­னா­வுக்கு கடிதம் மூலம் அறி­விக்­கப்­படும்.

பதில் கடிதம் தயா­ரிக்­கப்­பட்டு தற்­போது மீள் பரி­சீ­லனை செய்­யப்­பட்டு வரு­கி­றது.

இதற்­காக உல­மா­சபை உல­மாக்­க­ளுடன் வெளியில் உள்ள உல­மாக்­களும் அடங்­கிய குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. பதில் கடி­தத்தின் 95% மான பணிகள் பூர்த்­தி­யா­கி­யுள்­ளது.

பதில் கடி­தத்தை அஸ்­கி­ரிய மற்றும் மல்வத்தை பீடாதிபதிகளுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அடுத்த வாரம் உலமா சபையின் பதில் இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்றார்.

(நன்றி – விடிவெள்ளி)
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW