குர்ஆன் பற்றிய கேள்விகளுக்கு, சிங்களமொழியில் பதில் அனுப்புவோம் - ரிஸ்வி முப்தி முள்ளிநியூஸ்

குர்ஆன் பற்றிய கேள்விகளுக்கு, சிங்களமொழியில் பதில் அனுப்புவோம் - ரிஸ்வி முப்தி


அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரிவிப்பு
பொது­ப­ல­சேனா அமைப்பு உலமா சபை­யிடம் விளக்கம் கோரி­யுள்ள குர்ஆன் ஆயத்­து­களை விடவும் மேல­தி­க­மாக பல ஆயத்­து­களின் விளக்­கங்­களை அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உல­மா­சபை வழங்­க­வுள்­ளது.

சிங்கள மொழி­யி­லேயே விளக்­கங்கள் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளன என அகில இலங்கை ஜம்­இ­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தெரி­வித்தார்.

பொது­ப­ல­சேனா அமைப்பு உலமா சபைக்கு அனுப்பி வைத்­துள்ள கடிதம் தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்

பதில் கடிதம் பொது­ப­ல­சே­னா­வுக்கு அனுப்­பி­வைக்­கப்­ப­டுமா? அல்­லது மகா­நா­யக்க தேரர்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­ப­டுமா? எனும் தீர்­மா­னங்­களை உலமா சபையின் நிர்­வாக சபையே தீர்­மா­னிக்கும். எதிர்­வரும் 7 ஆம் திகதி நடை­பெ­றவுள் நிர்­வாக சபை கூட்­டத்தில் இது பற்றி தீர்­மா­னிக்­கப்­படும்.

குர்­ஆனை விமர்­சிக்கும் கூட்டம் எல்லாக் காலங்­க­ளிலும் இருந்து வந்­துள்­ளது. குர்­ஆ­னுக்­கான விளக்­கங்கள் கோரப்­பட்டால் விளக்­கங்கள் கட்­டாயம் வழங்­கப்­பட வேண்டும்.

குர்­ஆனைப் பற்றி முழு­மை­யாக தெளிவு பெற்றுக் கொள்­வ­தற்­காக வேண்டி பொது­ப­ல­சேனா கோரியுள்ள விளக்கங்களை விடவும் மேலதிகமாக சில ஆயத்துகளின் விளக்கங்களும் வழங்கப்படவுள்ளன என்றார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW