காருக்குள் நடிகை பாவனாவிற்கு இரண்டு மணி நேரம் பாலியல் தொல்லை!

தன்னை சிலர் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல நடிகை பாவனா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடிகை பாவனா எர்ணாகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் மூன்று பேர் தன்னைக் கடத்திக் கொண்டு போய் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறியுள்ளார். மூன்று பேரில் ஒருவர் சுனில். இவர் பாவனாவின் கார் சாரதியாக இருந்தவர். தான் இல்லாத நேரங்களில் வேறு சாரதிகளை பாவனாவுக்காக அமர்த்திக் கொடுப்பாராம். கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுனில் ஏற்பாடு செய்த சாரதி பாவனாவின் காரை ஓட்டி வந்தாராம். அப்போது வேறு இருவர் வலுக்கட்டாயமாக அந்தக் காரில் ஏறிக் கொண்டார்களாம். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் காரில் பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர் மூவரும். தாங்கள் விரும்பிய வகையில் விதம் விதமாக பாவனாவை போட்டோவுக்கு போஸ் கொடுக்க வைத்துள்ளனர்.
பின்னர் இரவு 10 மணியளவில் பாவனாவை அவரின் நண்பர் வீட்டருகில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார்களாம். நடந்த சம்பவங்களை நண்பரின் துணையுடன் பொலிஸில் விவரித்த பாவனா, இதுகுறித்த முறைப்பாடையும் கொடுத்துள்ளார். அதன்பேரில் குறித்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றவர்களை பொலிஸார் தேடி வருகிறார்கள்.