அநுராதபுர: பாடசாலை மாணவன் குத்திக் கொலை
தந்தைக்கும் மாமன்களுக்குமிடையில் இடம்பெற்ற சண்டையில் உட்புகுந்த 17 வயது பாடசாலை மாணவன் ஒருவன் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் மாணவனின் தந்தையும் பலத்த வெட்டுக் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளதோடு சந்தேக நபர்களைத் தேடி விசாரணைகள் தொடர்வதாக தெரிவித்துள்ளனர்.