பன்னீர்செல்வத்தை நாங்கள் மிரட்டவில்லை.. அவர் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்படுவார்: சசிகலா அறிவிப்பு.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கின்றனர். பன்னீர்செல்வம் எப்போதும் இணக்கமாகவும், அவருடனான உறவு சுமூகமாகவே இருந்தது.
சட்டமன்றக் கூட்டத் தொடரில் பன்னீர்செல்வமும், ஸ்டாலினும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர். பன்னீர்செல்வம் பின்னால் திமுகவினர் செயல்படுகின்றனர்.
பன்னீர்செல்வத்தை மிரட்டியதாக சொல்லப்படுவது உண்மையில்லை. அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக தான் தேர்வு செய்யப்பட்டபோது, ஓ.பன்னீர்செல்வம் தன் அருகில் அமர்ந்து மகிழ்ச்சியாகவே பேசினார்.
அவர் தற்போது பேசுவதற்கு பின்னால் ஸ்டாலின் இருக்கிறார்.
அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார் என அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா போயஸ் இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார்.