கண்டி ரியன்ஸ் ஹோட்டலில் அந்த முஸ்லிம் தலைவருடன் இருந்த பெண் யார்? (முழுவிபரம் இணைப்பு)
(முஸ்லிம் ஊரான் – ciaelectronics@gmail.com)
முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்களுக்கு மக்களின் பணிவான வேண்டுகோள்,
முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாடு 2017, பெப்ரவரி 12ல் பீ.எம்.ஐ.சீ.எச் ல் நடைபெறவுள்ளது, இதில் கலுந்து கொள்ள 500 பேராளர்கள் மாத்திரமே அழைக்கப்படுவதோடு, இதில் அதிகமானவர்கள் ஹக்கீமின் வலது கையான அர்ஸாத் நிஜாம்டீனின் கொழும்புப் பிரதேசத்தை சேர்ந்த தொண்டர்களெனவும் அவர்களின் கட்டுப்பாட்டில் மாநாட்டு அரங்கு காணப்படுமெனவும் தகவல்கள் கூறுகின்றன. ஹக்கீம் தனது கட்டுப்பாட்டில் உள்ளபடி தனக்கு ஆதரவானவர்களை மாத்திரம் வைத்து இம்மாநாட்டை நடாத்த முயற்சிப்பதோடு கட்சிப் போராளிகளில் 90 வீதமானவர்கள் புறக்கனிக்கப் பட்டுள்ளதுடன், ஹக்கீம் கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து உயர்பீட உறுப்பினர்களின் ஆதரவினை விலைக்கு வாங்கி, அவர்களின் மௌனத்துடன் பேராளர் மாநாடு எனும் நாடகத்தை நடத்தி முடிக்க ஏற்பாடு செய்துள்ளார்.
இம்மாநாட்டில் கிழக்கு மாகாண பேராளர்களின் ஆதிக்கத்தினை இல்லாமல் செய்வதற்கான சகல ஏற்பாடுகளும் ஹக்கீமால் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளதோடு மர்ஹும் அஸ்ரபின் போராளிகளும் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
ஹக்கீமின் தலைவர் எனும் பதவியாசையும், சுகவாழ்வு எனும் பேராசையும் தீக்குளம்புகளாக மாறி எமது சமூகத்தை சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. ஹக்கீமின் தான்தோன்றித்தனமும், பதவிமோகமும் எல்லையைத் தாண்டி, மர்கூம் அஸ்ரபின் எமது சமுகம் நோக்கிய போராட்டத்தையும், எதிர்கால தூரநோக்குக் கனவுகளையும் தகர்த்;ததுள்ளதுடன் மக்களின் நம்பிக்கைகளையும் குழி தோண்டிப் புதைத்து விட்டது.
ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸில் சில உயர்பீட உறுப்பினர்களின் உதவியுடன் தலைவனாக உலா வருவது முழுச் சமூகமும் இன்று உணர்ந்து, தெரிந்து கொண்ட விடயம் என்பதால் ஹக்கீம் என்னதான் முக்கினாலும் அவரால் இம்மக்களின் வெறுப்பை மாற்றியமைக்க முடியாது. ஹக்கீமுடன் உள்ள உயர்பீட உறுப்பினர்களாகிய நீங்களும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இல்லையேல் உங்களுக்கும் நல்லதொரு பாடத்தை புகட்ட சமுகம் தயாராகவுள்ளது. அல்லாஹ்வின் தண்டை உங்களுக்கும் இறங்கலாம்.
ஹக்கீம் 17 வருடங்களாக அவரது பல பரம்பரைக்குச் சேர்த்த செல்வங்களை, சொத்துக்களை பாதுகாக்க வேண்டுமாயின் தலைவராகவும், கெபினட் அமைச்சராகவும் இருக்க வேண்டிய தேவை நிச்சயமாக காணப்படுகிறது. இதில் எந்த மாற்றுக் கருத்தும் ஹக்கீமிடமில்லை. எனவே ஹக்கீம் தனது தலைமைத்துவத்தினை தக்கவைத்துக் கொள்ள செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் செய்து கொண்டே இருப்பார். இதற்காக என்ன விலையென்றாலும் கொடுப்பார், ஒரு உயர்பீட உறுப்பினருக்கு ஒரு கோடி கொடுத்தாலும் ஹக்கீமிடம் இருக்கும் பணத்தில் இந்தக் கோடிகள் ஒரு தூசு என்பது ஒரு தெளிவான உண்மையாகும்.
குர்-ஆனையும், ஹதீசையும் அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கட்சியிது. இதன் தலைமை இஸ்லாம் மார்க்கத்தோடு இருக்க வேண்டும், நீதியோடும், நியாயத்துடனும், இஹ்லாசுடனும் செயற்பட வேண்டும்;. பல பென்களுடன் தொடர்புள்ளதாக குற்றச்சாட்ட்டப்படும், வேலை வாய்ப்புக்களை மகிலால் மூலம் விற்கின்ற, எமது வெற்றிகளை காலத்துக்கு காலம் ஒவ்வொரு அரசுக்கும் அடகு வைக்கின்ற, பாராளுமன்றத்தில் சட்ட மூலங்களுக்கு கொடுக்கும் ஆதரவுகளுக்கு பணம் பெறுகின்ற, மக்களின் அபிவிருத்திகளுக்கு கிடைக்கின்ற பணத்தினை ஏற்பமிடுகின்ற, மர்ஹூம் அஸ்ரபினால் உருவாக்கப்பட்ட ஆரம்ப கால போராளிகளை கட்சியை விட்டு வெளியேற்றுகின்ற இது போல் இன்னும் பல. இப்படியான தரங்கெட்ட வேலைகளைச் செய்கின்ற சுயநலவாதியானவர்கள் இன்னும் தலைவர்களாக ஏற்றுக் கொள்கின்ற, உயர்பீட உறுப்பினர்களை மனிதனர்களாக பார்க்கவே முடியாதுள்ளது.
ஹக்கீமின் அடிமைகளாக இருக்கின்ற சில போக்கத்த உயர்பீட உறுப்பினர்களின் சமூகப் பற்றில்லாத நடத்தைகளால் அவர்களின் பலவீனத்தினால் சமுகத்திற்கு கிடைக்க வேண்டிய பாலும் பழமும் இன்று ஒரு சிலரின் வங்கிக் கணக்குகளில் சேமிக்கப்படுகிறது. ஹசனலியின் விரக்தியோடு ஹக்கீமை வெளியேற்ற எடுத்த பல முயற்சிகளுக்கு ஹசனலியின் பலவீனமான பதவியாசைகள் முட்டுக்கட்டையாக மாறுவது ஏற்புடையதல்ல. மீண்டும் ஹக்கீமின் செயற்பாடுகளை நியாயப்படுத்தி பணிந்ததுடன் ஹக்கீமை விமர்சிப்பதற்கு பதிலாக நான் கட்சிக்காரன் என்ற பாணியில் ஹக்கீமுடன் மீண்டும் சேர்ந்து செயற்பட முயற்சிப்பது ஒரு ஆரோக்கியமான செயற்பாடுமல்ல,
இது ஹக்கீமை தொடர்ந்து தலைவராக வாழ வழிவகுக்கும் என்பதை. ஹசனலி புரிந்து கொள்ள வேண்டும். தொழில் தருமத்துக்கு மாறாக காணி உறுதிப் பத்திரங்களை டிபெக்ஸ் மூலம் அழித்து மாற்றியமைத்து கச்சேரியில் பதிந்து கொள்ளைக்கார்களுக்கு உதவியதுடன் தானும் வருமானத்தில் பங்குதாரராகியதாக தாருஸ்ஸலாம் புத்தகத்தில் குற்றம் சுமத்தப்படும் நிசாம் காரியப்பர், மர்ஹூம் அஸ்ரப் தனது குடும்ப உறவினர் என்பதைக் கூட மறந்த நிசாம் காரியப்பர் இதன் உண்மையான தகவல்களை மக்களிடம் கூற வேண்டும்.
தாருஸ்ஸலாம் சொத்துக்கள் தொடர்பாக ஹக்கீம், நஸீர் அகமட், சல்மான், நிசாம் காரியப்பர் போன்றோர்கள் சமுகத்திடம் மன்டியிட வேண்டிய காலம் தூரத்தில் இல்லை. இந்தப்பூனையும் பால் குடிக்குமா? என்பதற்கு குர்ஆனை சுமந்த ஹாபிஸ் நஸீரும் சளைத்தவரல்ல என கல்குடா விடுதிகளும் மறுமையில் சாட்சி சொல்லும்,
கிழக்கில் 11 க்கும் அதிகமான குடும்பங்கள், சில தலைவர்களால் மன்மத லீலையால் வாழ்க்கை பிரிந்துள்ளதுடன் சிலர் பிள்ளைகளுக்காக, கௌரவத்துக்காக பிரியாது சண்டையிலேயே காலத்தை கடத்துகின்றார்கள். சில பெண்கள் கன்னித் தன்மையை இழந்து திருமணம் செய்ய முடியாதவர்களாக உள்ளனர். இக்குடும்பங்களை சீரழித்தவர்களின் வீடியோக்கள் இவர்களின் முகத்திரைகளை கிழிக்கத்தான் போகின்றது.
கார்னிவேலைச் சுற்றியிருக்கும் கட்டிடங்களும் சில தலைவர்களால் வாங்கப்பட்டுள்ளதுடன் டொக்டரின் பெயரில் கலஹா வீதியில் திலக் மாரப்பனயின் 27 ஏக்கர் தோட்டமும், அப்துல் கபூர் மாவத்தையில் ஒரு வீடும் வாங்கப்பட்டுள்ளன. நோன்பு 27 ம் இரவில் கண்டி ரியன்ஸ் ஹோட்டலில் சில தலைவர்களுடன் இருந்த பெண் யாரென்று தெரியுமா? அப்பெண்ணுக்கும் முஸ்லிம் தலைவர்களுக்குமிடையில் இருந்த தொடர்பு என்ன? அந்த ஹோட்டலில் நடந்த கூத்துக்கள் என்ன? இவைகள் வீடியோக்களாக வராமலா போய்விடும். அல்லாஹ் இவர்களின் முகத்திரைகளை கிழிக்காமல் விடமாட்டான். இது போல் இன்னும் பல. சில தலைவர்களின் சகல தந்திரங்களுக்கும் துணை போகும் உயர்பீட அடிமைகள், சொத்துப் பங்காளிகள், மாதாமாதம் சம்பளம் பெறுவோர், பதவியாசையுள்ளோர், தேர்தல்களில் குதித்து பதவிகளைப் பெறத் துடிப்போர், மூளையில்லா பிணங்கள் போன்ற உயர்பீடத்தில் வசிப்பவர்களின் விபரம் வருமாறு.
இல உயர்பீட உறுப்பினரின் பெயர் பதவி மாத வருமானம்
01 அப்துல் ரவூப் ஹிபதுல் ஹக்கீம்
02 அப்துல் ரவூப் ஹிபதுல் ஹாபீஸ்-சகோதரன் மீடியா- ஹக்கீமின் அமைச்சு ரூபா. 100.000.00
03 அப்துல் ரவூப் ஹிபதுல் ஹஸீர் -சகோதரன் வேலைத்திட்ட இணைப்பாளர் ரூபா. 150.000.00
04 எம். நயீமுல்லா – மச்சான் பிரத்தியோக செயலாளர் ரூபா. 200.000.00
05 ஏ.எல்.அப்துல் மஜீத் வேலைத்திட்ட இணைப்பாளர் ரூபா. 150.000.00
06 ரகுமத்துல்லா மன்சூர் இனைப்புச் செயலாளர் ரூபா. 125.000.00
07 மகிலால் டீ சில்வா செயற்பாட்டு இயக்குனர்-(நீர் வழங்கல்) ரூபா. 125.000.00
08 யூ.எல்.எம்.என்.முபீன் இனைப்புச்செயலாளர், (எதிர்பார்ப்பு தே.ப.பாரா மன் உறுப்பினர்) ரூபா. 150.000.00
09 சபீக் ரஜாப்தீன் (மு.பா.உ) உப தலைவர்(நீர் வழங்கள்) எதிர்பார்ப்பு-தே.ப.பாரா மன் உறுப் ரூபா. 150.000.00
10 மன்சூர் ஏ காதர் உயர்பீட செயலாளர் ரூபா. 150.000.00
11 எம்.ஏ.அன்சில் இனைப்பாளர் ஹரீஸின் அமைச்சு ரூபா. 125,000.00
12 எஸ்.எல்.எம். பளீல் பீ.ஏ. முதலமைச்சரின் செயலாளர் (எதிர்பார்ப்பு-தே.ப.பாரா மன் உறுப்) ரூபா. 120.000.00
13 ஏ.எம்.பாயிஸ் ஆலோசகர் – ஹக்கீமின் அமைச்சு ரூபா. 150.000.00
14 வாஸித் இனைப்பாளர் பைசல் காசிம் அமைச்சு ரூபா. 100.000.00
15 ஐ.எல்.எம்.மாஹிர் ஹக்கீமின் உதவியாளர் ரூபா. 100.000.00
16 எம்.டி.தமீம் செயலாளர்- வட மா ச உறுப் ரயீஸ் ரூபா. 75.000.00
17 எச்.எம்.எம்.இல்யாஸ் மௌலவி இனைப்பு உதவியாளர்- (நீர் வழங்கல்) ரூபா. 24.000.00
18 எம்.என்.எம். நப்லி இனைப்பு உதவியாளர்- (நீர் வழங்கல்) ரூபா. 24.000.00
19 ஜௌபர் மரைக்கார் இனைப்பு உதவியாளர்- (நீர் வழங்கல்) ரூபா. 24.000.00
20 ஏ.எஸ்.எம். ரில்வான் இனைப்பு உதவியாளர்- (நீர் வழங்கல்) ரூபா. 24.000.00
21 எம்.கே.எம். நாசிக் இனைப்பு உதவியாளர்- (நீர் வழங்கல்) ரூபா. 24.000.00
22 எம்.எம்.எம். முயீஸ் இனைப்பு உதவியாளர்- (நீர் வழங்கல்) ரூபா. 24.000.00
23 யூ.எம்.ஜாபீர் மௌலவி இனைப்பு உதவியாளர்- (நீர் வழங்கல்) ரூபா. 24.000.00
24 மர்சூக் அகமட் லெப்பை இனைப்பு உதவியாளர்- (நீர் வழங்கல்) ரூபா. 24.000.00
25 தாஜுதீன் இனைப்பு உதவியாளர்- (நீர் வழங்கல்) ரூபா. 24.000.00
26 எம்.வை.எம்.ஹில்மி இனைப்பு உதவியாளர்- (நீர் வழங்கல்) ரூபா. 24.000.00
27 எம்.ஐ.நைஸர் இனைப்பு உதவியாளர்- (நீர் வழங்கல்) ரூபா. 24.000.00
28 ஏ. அமானுல்லா இனைப்பு உதவியாளர்- (நீர் வழங்கல்) ரூபா. 24.000.00
29 புவாத் நஜீப் இனைப்பு உதவியாளர்- (நீர் வழங்கல்) ரூபா. 24.000.00
30 ஏ.யூ.எம்.ஜாபிர் இனைப்பு உதவியாளர்- (நீர் வழங்கல்) ரூபா. 24.000.00
31 எச்.எம்.ரயீஸ் இனைப்பு உதவியாளர்- (நீர் வழங்கல்) ரூபா. 24.000.00
32 எம்.ஐ.எம்.மன்சூர் பாராளுமன்ற உறுப்பினர்
33 எம். எச். சல்மான் (குடும்ப உறவினர்) தேசியப்பட்டியல் பாரா மன் உறுப்பினர்
34 எம்.எஸ்.தௌபீக் (சகலன்) தேசியப்பட்டியல் பாரா மன் உறுப்பினர்;
35 எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதியமைச்சர்
36 பைசால் காசிம் பிரதியமைச்சர்
37 அலி ஸாஹிர் மௌலானா பாரா உறுப்- எதிர்பார்ப்பு அமைச்சு
38 எம்.டி.எம்.ஹசனலி (மு.பா.உ) அடுத்த தே.ப. பாரா மன் உறுப்பினர்;
39 பஸீர் சேகுதாவூத் (மு.பா.உ) எதிர்பார்ப்பு-தே.ப.பாரா மன் உறுப்பினர்
40 எம்.பி.பாருக் (மு.பா.உ) எதிர்பார்ப்பு-தே.ப.பாரா மன் உறுப்பினர்
41 நிசாம் காரியப்பர் எதிர்பார்ப்பு-தே.ப.பாரா மன் உறுப்பினர்.
42 எஸ்.எம்.ஏ.கபூர் எதிர்பார்ப்பு-தே.ப.பாரா மன் உறுப்பினர்
43 ஸாபி ரஹீம் எதிர்பார்ப்பு-தே.ப.பாரா மன் உறுப்பினர்
44 ஏ.எல்.எம். நஸீர் எதிர்பார்ப்பு-தே.ப.பாரா மன் உறுப்பினர்
45 ரியால் எதிர்பார்ப்பு-தே.ப.பாரா மன் உறுப்பினர்
46 ஏ.ஜே.எம்.ரிஸ்வி எதிர்பார்ப்பு-தே.ப.பாரா மன் உறுப்பினர்
47 ராவுத்தர் நைனா முகம்மட் எதிர்பார்ப்பு-தே.ப.பாரா மன் உறுப்பினர்
48 கே.எம்.ஏ.ரசாக் எதிர்பார்ப்பு – மா.ச.சுகாதார அமைச்சு
49 ஏ.எல்.தவம் எதிர்பார்ப்பு – மா.ச.சுகாதார அமைச்சு
50 ஜே.எம். லாஹிர் எதிர்பார்ப்பு – மா.ச.சுகாதார அமைச்சு
51 ஆர்.எம்.அன்வர் எதிர்பார்ப்பு – மா.ச.சுகாதார அமைச்சு
52 அர்ஷhட் நிஜாம்டீன் மாகாணசபை உறுப்பினர்
53 யூ.டி.எம்.அன்வர்
54 ஏ.எல்.எம். கலீல் மௌலவி
55 யூ.எம்.வாகிட்
56 எம்.ஐ.அக்பர்அலி- நஸார் ஹாஜி
57 ஸியாட் ஹாமிட்
58 யூ.எல்.தௌபீக்
59 சித்தி ரிபாயா இப்தி
60 எம்.எஸ்.எம்.ஹசன்
61 எம்.டி.மல்ஹர்டீன்
62 அப்துல் ஹை
63 டொக்டர். தஸ்தகீர்
64 தாஸீம்
65 ஜே.அன்சார்
66 எம்.ஐ.எம். பிர்தௌஸ்
67 ஏ.எம். ரகீப்
68 எம்.எச்.ஏ.கபூர்
69 எஸ்.எம்.ஹில்மி
70 எஸ்.எல்.எம்.ஹனிபா மௌலவி
71 சேகு இஸ்மாயில்
72 என்.மாஹிர்
73 எம்.ஏ.தாஹிர்
74 ஏ.எம். ஹரீஸ்
75 எஸ்.எச்.எம்.நியாஸ்
76 எச்.எம். ரயீஸ்
77 ஏ.சி.ஏ. நாஸர்
78 ஏ.அயாது பாவா
79 எம்.எச்.எம். ஐயூப்
80 ஏ.எம்.முபார்டீன்
81 ஏ.எச்.பைரூஸ்
82 ஏ.எம்.ஏ. அஸீஸ்
83 ஏ.சி. யகியாக் கான்
84 எஸ்.எம்.எம்.முஸ்தபா
85 எம்.எஸ்.ஐயூப்கான்
86 ஆர். மக்பூல்
87 ஏ.ஜலால்தீன்
முஸ்லீம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்கனையும் அதன் முழு அதிகாரத்தையும் தனது கையில் வைத்திருக்க உயர்பீடத்தில் இருக்கும் ஜால்ராக்களுக்கு சம்பளத்துடன் பதவிகளும், ஏனையோருக்கு அவர்களது வங்கிக் கணக்குகளுக்கு மாதாமாதம் பணமும் கொடுக்கப்படுகிறது.
இதற்கு மேலாக தற்போது இருக்கும் உயர்பீட உறுப்பினர்கள் 90 பேரில் 56 உறுப்பினர்களை யாருடனும் கலந்தாலோசிக்காது தற்போதய யாப்பின்படி ஹக்கீம் தன் சுயவிருப்பிற்கேற்ப நியமிக்கிறார். ஹக்கீமின் அநியாயங்களை எதிர்த்து குரல் கொடுக்கும் உயர்பீட உறுப்பினர்களை தற்போதைய யாப்பு 3.1 பிரகாரம் ஹக்கீம் கட்சியில் இருந்து தடை செய்வார். ஹிட்லரை விட மிகக் கடுமையான சர்வதிகாரம் கொண்ட ஹக்கீமினால் உருவாக்கப்பட்ட இந்த யாப்பினை உயர்பீட உறுப்பினர்களால் மாற்ற முடியுமா?
அது மட்டுமல்ல இந்த 90 உயர்பீட உறுப்பினர்களில் இருந்து கட்சியின் பதவி வழியாக வருகின்ற 36 உறுப்பினர்களைக் கொண்ட மசூறா சபையினை உருவாக்கி அதன் மூலம் உயர்பீட உறுப்பினர்களின் நியமனங்கள் உள்ளடக்கியதாக கட்சியின் இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்படுமா? உடனடி அவசர தீர்மானங்களுக்கு இந்த 36 உறுப்பினர்களில் இருந்து பொறுப்புமிக்க பதவியில் உள்ள 7 உறுப்பினர்களைக் கொண்ட உடனடி மசூறா சபையினை இவர்களால் ஏற்படுத்த முடியுமா?
உயர்பீட பேச்சுவார்த்தைகள், மாற்றங்கள், முடிவுகள் ஆங்கிலத்தில் பேசி மற்றவர்களுக்குப் புரியாத பாணியில் தங்களது விடயங்களை நிறைவேற்றிக் கொள்வதனை தவிர்த்து அனைத்தும் தமிழில் நடைபெறுமா? ஒரு பிரச்சனை ஏற்கனவே பேசிக்கொண்டதன் பிரகாரம் பேசப்பட்டு பளீல் பீ.ஏ, தவம், மன்சூர், நயீமுல்லா, முபீன், முழக்கம் மஜீத் இது போல் இன்னும் சிலர் இணைந்து ஹக்கீம் முடிவெடுப்பார் என்ற காய் நகர்வை நிறுத்த முடியுமா? ஓவ்வொரு உயர்பீடக் கூட்டத்திலும் ஹக்கீமுக்கு தேவையான, ( பெப்ரவரி 4ல் நடந்த உயர்பீடக் கூட்டம் போன்று) சாதகமான முடிவுகளை எடுக்க பல லட்சங்கள் கை மாறுவதனை தடுக்க முடியுமா? இவைகள் முடியாது எனின் முழு முஸ்லீம் சமூகத்தினையும் ஹக்கீமின் அடிமைகளாக்க எங்களாலும் முடியாது.
உயர்பீட உறுப்பினர்களாகிய நீங்கள் முன்வந்து ஹக்கீம் உட்பட சகல விடயங்களையும் மாற்றவில்லையாயின், மக்களாகிய நாங்கள் மாற்றுவோம்.
ஹக்கீம் தலைவர் பதவியை விட்டு அவ்வளவு சீக்கிரம் போகமாட்டார். ஏசினாலும், பேசினாலும், துரத்தினாலும் போகமாட்டார். . ஹக்கீமின் சகல விடயங்களும் எங்களை விட உங்களுக்கு அதிகமாகவே தெரியும், அனைத்தையும் தெரிந்து கொண்டு தான் நீங்கள் அனைவரும் ஏதோ ஒன்றுக்காக ஹக்கீமுடன் இருக்கின்றீர்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும்.
நாங்கள் எல்லோரும் அல்லாஹ்விற்கு பயந்து நடப்போம். அதனால் தான் உயர்பீட உறுப்பினர்களாகிய உங்களிடம் ஹக்கீமின் தலைமைத்துவத்தினை மாற்றியமைத்து தலைமைத்துவத்தினை கிழக்கிற்கு மாற்றி சமுகத்துக்கு விருட்சத்தையும், வெளிச்சத்தையும் பெற்றுக் கொடுக்குமாறு அல்லாஹ்வை சாட்சியாக வைத்து கேட்டுக் கொள்கின்றோம்.