கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் தம்பலகாமம் பிரதேச செயலக வீரர்கள் வெற்றி முள்ளிநியூஸ்

கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் தம்பலகாமம் பிரதேச செயலக வீரர்கள் வெற்றி


வடக்கு கிழக்கு சுற்றாடல் அதிகார சபையினால் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் இன்று 12 ஞாயிற்றுக் கிழமை இடம் பெற்ற கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் தம்பலகாமம் பிரதேச செயலக வீரர்கள் வெற்றி பெற்றனர்.

இச் சுற்றுப் போட்டி தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரீபதி ஜெய கௌரி தலைமையில் தம்பலகாமம் ஈச்ச நகர் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதில் பிரதேச செயலாளர் அலுவலக வீரர்கள், பிரதேச சபை அலுவலக வீரர்கள், தம்பலகாமம் பொலிஸ் பிரிவு வீரர்கள், ஜெமுனு புற இராணுவ வீரர்கள் என நான்கு கழகங்கள் பங்கு பற்றியிருந்தனர்.

05 ஓவர் கொண்ட இச் சுற்றுப் போட்டியில் 11 பேர்கள் விளையாடினார்கள்.

இதில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் அலுவலக வீரர்கள் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்.























செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW