‘வீண் கூச்சல்’ போடுபவர்கள் அந்தக் காலத்திலும் இருந்தார்கள்: மைத்ரி
புதிய அரசியலமைப்புத் திட்டத்தின் அடிப்படையில் மாகாணத்துக்கு மாகாணம் செல்வதற்கு விசா எடுக்கும் நிலை வரும் என இன்று கூச்சலிடுபவர்களைப் போலவே யுத்த காலத்திலும் சிலர் இருந்தார்கள் என தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
எனினும், எந்த சோதனை வந்தாலும் அரசாங்கம் அவற்றை வெற்றி கொண்டு நாட்டின் அபிவிருத்தியைக் கருத்திற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என ஜனாதிபதி தனது மட்டக்களப்பு விஜயத்தின் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.