பெந்தோட்டை கடலில் இறங்கிய தர்கா நகர் சர்வதேச பாடசாலை மாணவனை காணவில்லை.

பெந்தோட்டை கடலில் குளிக்க சென்ற தர்கா நகரை சேர்ந்த முஸ்லீம் மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் மூலம் அறியமுடிகிறது.
சர்வதேச பாடசாலையில் கல்வி கற்கும் மூன்று அல்லது நான்கு மாணவர்கள் இன்று காலை பெந்தோட்டை கடலுக்கு குளிக்க சென்றுள்ள அதேவேளை மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
காணாமல் போனவரை தேடும் பணிகள் தொடர்ந்துள்ளதாக அறியமுடிகிறது.