பொலன்நறுவை குசும்கம இடத்தில் இளைஞன் ஒருவர் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை.

பொலன்நறுவை குசும்கம இளைஞன் ஒருவர் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இப் பரிதாப சம்பவம் இன்று (26) புதன்கிழமை அதிகாலை 5:20 மணியளவில் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ரயில் பொலன்னறுவை புகையிரத நிலையத்தில் தறித்து நின்றுவிட்டு மட்டக்களப்பு நோக்கி பயணிக்கையில் குசும்கம எனும் இடத்தில் இடம்பெற்றது.
குறித்த இளைஞன் நில்கமால் என அறியப்படும் 28 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஆவான்.
மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாடு முற்றியதை அடுத்தே இவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.