இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களுக்கான தகவல் உத்தியோகத்தர்கள் நியமனம் முள்ளிநியூஸ்

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களுக்கான தகவல் உத்தியோகத்தர்கள் நியமனம்


2776 அரச நிறுவனங்களுக்கான தகவல் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் சில நிறுவனங்களுக்கான தகவல் உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பியதிஸ்ஸ ரணசிங்க குறிப்பிட்டார்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரகாரம் தகவல் உத்தியோகத்தர்களுக்கான பொறுப்புகள் குறித்தும் அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW