இலங்கையின் எதிர்காலத்துக்கு பூரண ஒத்துழைப்பு: மோடி
இந்து சமுத்திரத்தின் வர்த்தக மையமாக உருவெடுக்கும் இலங்கையின் செயற்பாடுகளுக்கு இந்தியா முழுமையான ஒத்துழைப்பைத் தரும் என தெரிவித்துள்ளார் இந்திய பிரதமர் மோடி.
இந்தியா பயணித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ள அதேவேளை இரு நாட்டு உறவுகளைப் பலப்படுத்தும் வகையிலான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
எனினும், இந்தியா எப்போதுமே இலங்கையின் எதிரி எனவும் இலங்கையின் வளங்களைச் சுரண்டுவதே இந்தியாவின் திட்டம் எனவும் கூ.எ பிரமுகர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.