பேஸ்புக்கில் கவிதை எழுதிய ஆசிரியருக்கு கிடைத்த இடமாற்ற 'ரியாக்சன்'
தனது தனிப்பட்ட பேஸ்புக் கணக்கில் கவிதை பதிவேற்றம் செய்த குற்றச்சாட்டுக்காக ஆசிரியர் ஒருவர் இடமாற்றப்பட்டுள்ளார்.
குளியாபிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் இளம் ஆசிரியர் ஒருவரே இந்தக் குற்றச்சாட்டின் கீழ் பிறிதொரு பாடசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
இது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்துத் தெரிவிக்கையில்,
“சேவைக்கான தேவை நிமித்தம் காரணமாகவே குறித்த ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால்டி செயலுக்காகவே பழிவாங்கப்பட்டுள்ளார்” என்றார்.
