கிண்ணியா மாஞ்சோலையில் புதிதாக கரையோர வீதி 3 கோடி 64 இலட்சத்தில் நிர்மாணம்.-இம்ரான் MP

திருகோணமலை மாவட்ட பாராளமண்ற உறுப்பினர் ஐக்கிய தேசியக் கட்சி கிழக்கு மாகாண பிரதான அமைப்பாளருமான கௌரவ இம்ரான் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தேசிய கொள்கைகள் திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் நிதியொதுக்கீட்டில் கிண்ணியா மாஞ்சோலையின் கரையோர பகுதியில் புதிதாக காபட் வீதியோன்று அமைக்கப்படவுள்ளது.
இவ்வீதியின் நிர்மானப்பநிகளுக்கென 3 கோடியே 64 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை வீதி அமைக்கப்படவுள்ள பகுதியை கிண்ணியா பிரதேச செயலாளர் அனஸ் கிண்ணியா நகர சபை செயலாளர் அன்வர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்.



