வடிவேலுவையே கதிகலங்க வைத்த டவுசர் பாண்டி..! அனாதையான கதை...
துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் வரும் டவுசர் பாண்டியை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இவரது பெயர் பாரி வெங்கட். இந்த படத்தில் இவர் பேசும் மெட்ராஸ் பாஷை மற்றும் உடல் மொழி படம் பார்த்தவர்களின் நினைவை விட்டு இன்னும் நீங்கி இருக்க வாய்ப்பு இல்லை. முக்கியமான இருந்த இடத்திலேயே சென்னையை சுற்றிக்காட்டும் காட்சி நினைத்து நினைத்து சிரிக்க வைப்பவை.
வடிவேலுவுக்கு சரியான போட்டியாக கருதப்பட்டவர். அவரது வித்தியாசமான கமெடிக்கு பட வாய்ப்புகள் மளமளவென குவிந்தது. 1999ம் ஆண்டில் இடைவிடாது நடித்து கொண்டிருந்தார். இவரின் வளர்ச்சியை பார்த்து வடிவேலுவே ஒரு கட்டத்தில் கதிகலங்கி போனார் என்று கூறப்பட்டது.
இன்று மிகப்பெரிய இடத்தை பிடித்து இருக்க வேண்டியவர். விதிவசத்தால் உயிரை விட்டார். திருநெல்வேலி படத்தின் படப்பிடிப்பை முடித்து பஸ்சில் சென்னை திரும்பி கொண்டிருந்தார். பெரம்பலூர் அருகே உள்ள மங்களமேடு என்னும் இடத்தில் நடந்த விபத்தில் பரிதாபமாக உயிரை இழந்தார்.
முதலில் அவர் நடிகர் பாரி வெங்கட் என யாருக்கும் தெரியவில்லை. அனாதை பிணம் என கருதி போலீசார் அடக்கம் செய்தனர். அதன்பிறகே அவரது குடும்பத்தினருக்கு உண்மை தெரிந்து புதைத்த உடலை மீட்டு இறுதி சடங்கு செய்து முறைப்படி அடக்கம் செய்தனர். அவரது குடும்பத்திற்கு நடிகர் விஜய் உதவி செய்தார். அதே போல மற்ற நடிகர்களும் உதவி செய்தனர்.