சவுதி ‘தடை’; ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உதவியை நாடும் கட்டார்
தமது நாடு மீது சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உட்பட்ட நாடுகள் விதித்திருக்கும் தடைகளை நீக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் உதவியை நாடியுள்ளது கட்டார்.
பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பு நாடுகளுடன் நேற்றைய தினம் ஐ.நா வளாகத்தில் சந்திப்பொன்றை மேற்கொண்ட கட்டார் வெளியுறவுத்துறை அமைச்சர் முஹம்மத் பின் அப்துல் ரஹ்மான் அல் தானி, குறித்த கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
இங்கே Like செய்யுங்கள்
ராஜதந்திர உறவுகள் துண்டிக்கப்பட்டு ஒரு மாத காலம் நெருங்கிகின்ற நிலையில், இதுவரை ஏட்டிக்குப் போட்டியான நடவடிக்கைகளால் நிலைமை மோசமாகி வருவதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஈரான் தலையீடு மற்றும் இஹ்வான்களுக்கான புகலிடம் போன்ற பிணக்குகளின் அடிப்படைக் காரணமாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.