மூதூர் விபத்தில் மூவர் கவலைக்கிடம்
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மனைச்சேனைப் பகுதியில் முச்சக்கர வண்டியும் சோடா ஏற்றி வந்த பட்டா ரக வாகனமும் மோதி விபத்துக்கு ள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்து மூவர் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று செவ்வாய்கிழமை மாலை 3.30 மணியளவில் இவ்விபத்து பெற்றுள்ளது. பட்டா வாகனம் செலுத்திச் சென்ற சாரதி தப்பித்துச் சென்றுள்ளதாக தகவல் தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.