அறநெறிப் பாடசாலை கட்டிடம் அமைச்சர் சஜித் பிரேமதாசா வினால் திறந்து வைப்பு. முள்ளிநியூஸ்

அறநெறிப் பாடசாலை கட்டிடம் அமைச்சர் சஜித் பிரேமதாசா வினால் திறந்து வைப்பு.

திருகோணமலை மாவட்டத்தில்  தம்பலகாமம் பிரதேசத்தில் கல்மெட்டியாவ கிராம சேவகர் பிரிவில்
97ம் கட்டை கல்மெட்டியாவ ரஜ மகா விகாரையில் 40 இலட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட  அறநெறி பாடசாலை கட்டிடம் ஒன்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், வீடமைப்பு  நீர்மாணத்துறை மற்றும் கலாசார  அமைச்சர் சஜீத் பிரேமதாசவினால் இன்று  (25) வியாழக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சபை முன்னால் உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சேருவிலைத் தொகுதி பிரதான அமைப்பாளருமான டொக்டர் அருண சிறிசேன அவர்களின் அழைப்பிற்கமைவாக
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், வீடமைப்பு  நீர்மாணத்துறை மற்றும் கலாசார  அமைச்சர் சஜீத் பிரேமதாச இங்கு வருகை தந்து இதனை திறந்து வைத்தார்.

இதன் போது பாராளுமன்ற  உறுப்பினர் சந்தித் சமரசிங்க தம்பலகாமம் பிரதேசச் செயலாளர், செருவில பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும்  பொதுமக்கள் பலர் கலந்து  சிறப்பித்தனர்.

இதன் போது அமைச்சர் சஜித் பிரேமதாசா  இம் மாவட்டத்தில் உள்ள பிரதேசத்தில் மேலும் 5 அறநெறி பாடசாலைகளை விரைவில் அமைத்து தருவதாகவும் உறுதியளித்தார்.


















செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW