அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு - அரசாங்கம் திட்டம்!
இறுதி காலாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
அரசு எதிர்பார்த்த இலக்குகளை எட்டினால், பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் அடுத்துவரும் காலாண்டுக்குள் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்ததாக பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
