எரிபொருள் ஒதுக்கீடு இரு மடங்காக அதிகரிப்பு
அடுத்த மாதம் முதல் எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க முடியும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை திருத்தத்துடன் அதே திருத்தம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனடிப்படையில் அடுத்த மாதம் முதல் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு 14 லீட்டர் எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் கஞ்சன விஜேசேகர இவ்வாறு தெரிவித்தார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
