சுவிட்சர்லாந்திலிருந்து தனி விமானத்தில் நாடுகடத்தப்படும் புகலிடக்கோரிக்கையாளர்கள்!
கடந்த ஆண்டு புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 115 பேரை நாடுகடத்த, 24 விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு முறை நாடுகடத்துவதற்குமான செலவு 13,000 சுவிஸ் ஃப்ராங்குகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் பலர், இப்படி புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்களை நாடுகடத்துவதற்காக பெரும் தொகை செலவு செய்யப்படுவதை விமர்சித்துவருகிறார்கள்.
ஆனால், புலம்பெயர்தல் செயலகமோ, அந்த செலவு நியாயமானதுதான் என்றும், புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்கள் சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேறித்தான் ஆகவேண்டும் என்றும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
