பயணிகளின் உயிரோடு விளையாடும் சாரதி பயணிகளின் பரிதாப நிலை! முள்ளிநியூஸ்

பயணிகளின் உயிரோடு விளையாடும் சாரதி பயணிகளின் பரிதாப நிலை!

பயணிகளின் உயிரோடு விளையாடும் சாரதி பயணிகளின் பரிதாப நிலை!


திருகோணமலை இருந்து இன்று அதிகாலை மட்டக்களப்பு நோக்கி வருகை தந்த தனியார் பஸ் சாரதி புகையிலை அதிகமாக பாவித்துவிட்டு வாகனத்தை செலுத்தியதாக சொல்லப்படுகிறது. 

 மூன்று தடவைகளுக்கு மேல் பஸ் வீதியை விட்டு விலகி சென்றுள்ளது. பாதுகாப்பற்ற தன்மையினை உணர்ந்த பயணிகள் சாரதியை பஸ்ஸில் இருந்து இறக்கியதாக தெரியவந்துள்ளது.

 பயணிகளின் உயிரோடு விளையாடும் இவரை போன்ற பொறுப்பற்ற சாரதிகளின் செயல்களால் பயணிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணம் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தோன்றியுள்ளது. 

 பஸ் உரிமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி பொது மக்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்குமாறு முகநூலில் கேட்டுக்கொண்டுள்ளனர். 

 இந்த தகவலை முகநூலில் M Siva Kumar என்பவர் பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW