திருகோணமலையில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது

தண்ணீர் மோட்டார் மற்றும் கையடக்க தொலைபேசிகளை திருடியதாக பல முறைப்பாடுகள் கிடைக்க பெற்ற நிலையில் சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை செய்தபோது தண்ணீர் மோட்டார் மற்றும் கையடக்க தொலைபேசி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த 20- 45 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சந்தேக நபர்கள் தொடர்ச்சியாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இவர்களுக்கு எதிராக பல வழக்குகள் இடம் பெற்று வருகின்றமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டசந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW