2022 ஆண்டு மாகாண சபைகளில் பிரதிநிதிகள் இல்லாத போதிலும் 44,265 கோடி செலவு

மாகாண சபைகளின் பிரதிநிதிகள் இருந்த 2019 ஆம் ஆண்டு மாகாண சபைகளின் செலவினங்களுக்காக 30,129 கோடி ரூபாவும், 2022 ஆம் ஆண்டு மாகாண சபைகளின் பிரதிநிதிகள் இல்லாத போது 44,265 ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதிகளுடன் மாகாணசபை செயற்பட்டிருந்தால் அவற்றின் பராமரிப்புக்காக மொத்த செலவில் சுமார் 0.003 வீதம் செலவாகும் எனவும் இது மிகவும் சிறிய செலவு என்றும் நிதி ஆணைக்குழுவின் செயலாளர் தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படும் பணத்தின் பெரும்பகுதி ஊழியர் சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் உள்ளிட்ட தொடர் செலவுகளுக்காகவே செலவிடப்படுவதாகவும், இது பொதுவாக வருடாந்தம் 35,000 முதல் 40,000 கோடி வரை செலவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கல்வி மற்றும் சுகாதார துறைகளில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக அதிக தொகை செலவிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, ஊரக வளர்ச்சி, கழிவு மேலாண்மை உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான மூலதனச் செலவு பொதுவாக 3,000 முதல் 4,000 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது .
இது 2019ல் ரூ.3,001 கோடியாகவும், 2022ல் ரூ.3,934 கோடியாகவும் இருந்தது .
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW