"உன்னைத் தூக்கி தரையில் அடிப்பேன்" என்று பொலிஸ்ஸாரை மிரட்டிய சாரதி

வெலிக்கடை பொலிஸ் போக்குவரத்து பிரிவின் கான்ஸ்டபிள் ஒருவர் இராஜகிரிய தேவாலயத்திற்கு அருகில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போது ஹெட்டியவத்தையிலிருந்து நுகேகொட நோக்கி பயணித்த தனியார் பஸ், பஸ் தரிப்பிடத்திலிருந்து அப்பால் நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அப்போது, பஸ் நிறுத்துமிடத்துக்கு வெளியே பஸ்ஸை நிறுத்திய போது. இறங்கிவந்த சாரதி கையை நீட்டி. கான்ஸ்டபிளை மிரட்டி. ''நீதிமன்றத்தில் செய்ய முடியலைன்னா. எங்காவது போடு. அது பெரிய விஷயம் இல்லை. எனினும். சாலையில் இருக்க வேண்டாம். பஸ்ஸை ஏற்றி உன்னை கொல்லுவேன் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள நினைவில் வைத்துக்கொள்.' அது யாராக இருந்தாலும் எனக்கு கவலையில்லை. என் பெயர் தில்ஷன். கவனமாகக் கேட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறு என்ற அவர் கொலை மிரட்டல் விடுத்தார்.
அப்போது. எந்த பிரச்சனையும் இல்லை. நன்றி என்று கான்ஸ்டபிள் பதிலளித்தார்.
சந்தேகத்திற்கிடமான சாரதியின் செயலையையும். அச்சுறுத்துவதையும் கான்ஸ்டபிள் தனது கையடக்கத் தொலைபேசி மூலம் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில். மஹரகம நிலமார பிரதுசத்தில் வைத்து. புதன்கிழமை (02) கைது செய்யப்பட்டார். சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW