இலங்கையில் பாடசாலை மாணவர்கள் பற்றி அதிர்ச்சி தகவல்

இந்நிலைமை குழந்தைகளின் இடைநிலைக் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்கால வாழ்வில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என UNICEF குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் சுமார் 3 வருடங்களாக பாடசாலைகள் மூடப்பட்டதனால், அல்லது இடைநிறுத்தப்பட்டமையினால் ஆரம்பப் பிரிவை சேர்ந்த 1.6 மில்லியன் பிள்ளைகள் கல்வியை இழந்துள்ளதாக UNICEF சுட்டிக்காட்டியுள்ளது.
கல்வி அமைச்சும் UNICEF நிறுவனமும் இணைந்து மாணவர்களுக்கு மூன்று வருடங்கள் தவறவிட்ட கல்விக் காலத்தை மீள வழங்குவதற்கான தேசிய வேலைத்திட்டத்தை நேற்று (16) கொழும்பில் ஆரம்பித்த போது, இந்த விடயம் குறித்து வௌிக்கொணரப்பட்டது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW