மீண்டும் 7 இடங்களில் குண்டுத் தாக்குதல் திட்டம்! எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள்

பாராளுமன்றத்தில் நேற்று (6) உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சிறைச்சாலையில் இருக்கும் ஐ எஸ் பயங்கரவாதிகளால் இந்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இது பாரதூரமானதோர் விடயம் என்பதனால்,
இதன் உண்மை தன்மை குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறும், மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க அனுமதிக்க முடியாது என்பதால் கடந்த காலங்களில் இருந்து பாடம் கற்று இந்த அபாயம் குறித்து ஆராயுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு நாட்டின் சட்டத்தினுள் இயன்ற உச்சபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW