மாணவர்களின் ஊட்டச்சத்தையும் வலிமையையும் அதிகரிக்க முட்டை வழங்க தீர்மானம்

வடமேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களின் உணவில் முட்டையை உள்ளடக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக வடமேல் மாகாண ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பச்சைக் கஞ்சியின் தரத்தை மாற்றியமைக்க முடியும் எனினும் முட்டையில் அவ்வாறு மாற்ற முடியாது எனவே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், மாணவர்களின் ஊட்டச்சத்தையும் வலிமையையும் அதிகரிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கால்நடை தீவன பிரச்சனைக்கு உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வு காண்பதாக ஆளுநர் வடமேல் மாகாண ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW