அடிப்படை சம்பளத்தில் பாதியை வழங்கவும், பல ஊழியர்களை வீட்டில் வைத்திருக்கவும் தீர்மானம்

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 16000 ரூபா எனவும், இந்த நிலையில் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு 8000 ரூபாவை வழங்குவதாகவும் சங்கத்தின் செயலாளர் அன்டனி மார்க்ஸ் தெரிவித்தார்.
இந்நிலைமை காரணமாக சில ஊழியர்கள் வேறு வேலைகளுக்குத் திரும்புவதாகவும், மீண்டும் பணிக்கு அழைக்கப்படும் போது பணிக்கு வரவில்லையென்றால், நிறுவனத் தலைவர்கள் சேவையிலிருந்து விலகியவர்களாகக் கருதி, பணம் கொடுக்காமல் நீக்குவார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW