திருகோணமலை உப்புவெளியில் குண்டுகள் மீட்பு
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சர்தாபுர கன்னியா வீதியிலுள்ள காட்டுப்பகுதியில் மர்மமான பையொன்று கிடப்பதாக பொது மக்கள் சர்தாபுர விசேட அதிரடிப்படையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அப் பையிலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (14) குறிப்பிட்ட இடத்திற்குச் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் பரிசோதகர் மானவடுகே தலைமையிலான குழுவினர் சென்று பையினை சோதனைக்குட்படுத்திய போது மோட்டார் துவக்குகளுக்கு பயன்படுத்துகின்ற 12 ரவைகள் அதனுடைய பீஸ்கள் 12, டொம்பா துப்பாக்கி ரவைகள் 12,கைக்குண்டுகள்04 , கிளைமோர் குண்டுகள் 03 மீட்கப்பட்டு உப்புவெளி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக சர்தாபுர விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதோடு குறித்த ஆயுதங்களை திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டும் வருகின்றனர்.
இதனை நண்பர்களுடன் பகிரவும்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW