நல்லாட்சி அரசாங்கத்தில் 22 பள்ளிவாசல்களுக்கு சவால்கள் விடப்பட்டுள்ளன

-23- காலை பத்தரமுல்லை, நெலும்பொக்குன மாவத்தையிலுள்ள இணைந்த எதிர்க்கட்சியினரின் அலுவலகத்தில் மஹிந்த அணி ஆதரவு முஸ்லிம் பிரமுகர்கள் கலந்துகொண்ட கூட்டமொன்று நடைபெற்றது.
நிகழ்வில் கலந்துகொண்ட முஸ்லிம் பிரதிநிதிகள் தற்போது நடைபெற்றுவரும் நல்லாட்சியில் பொரளை முதல் அனுராதபுரம் வரை 22 பள்ளிவாசல்களுக்கு சவால்கள் விடப்பட்டுள்ளன. சில தாக்கப்பட்டுள்ளன. மஹியங்கனை பள்ளிவாசல் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை.
இஸ்லாம் பாடம் போதிப்பதற்கு ஆசிரிய வெற்றிடங்கள் நிலவினாலும் மௌலவி ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படவில்லை. முஸ்லிம் பாடசாலைகள் நிர்மாணிப்பதற்கு காணி வழங்குவதற்கு மறுப்புத் தெரிவிக்கப்படுகிறது என்னும் முறைப்பாடுகளை முன்வைத்தனர்.