யாசகர்களை கைது செய்ய நடவடிக்கை!

கொழும்ப நகரில் வீதி சமிஞ்சை விளக்குள் உள்ள இடங்களில் யாசகத்தில் ஈடுபடுவோரை கைது செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த இடங்களில் வாகன போக்குவரத்துக்களுக்கு இடையூடாரன வகையில் அவர்கள் யாசகத்தில் ஈடுபடுவதாகவும் இதனால் அவர்களை இன்று முதல் கைது செய்யவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறாக கைது செய்வோர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.