ஈரான்: ரயில் விபத்தில் 31 உயிர்கள் பலி!
வட ஈரானில் தரித்து நின்ற ரயில் ஒன்றுடன் இன்னுமொரு ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் 31 பேர் உயிரிழந்து பலர் காயமடைந்துள்ளவனர்.
தலைநகர் தெஹ்ரானிலிருந்து 250 கி.மீ தொலைவில் ஏற்பட்ட இவ்விபத்தில் காயப்பட்ட 70 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை 31 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதில் நால்வர் ரயில்வே ஊழியர்கள் எனவும் இதுவரை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.