மலேசியா: இலங்கையர் தலைமையில் பெண்களைக் கடத்தி ‘வியாபாரம்’ செய்யும் குழு கைது முள்ளிநியூஸ்

மலேசியா: இலங்கையர் தலைமையில் பெண்களைக் கடத்தி ‘வியாபாரம்’ செய்யும் குழு கைது


மலேசியாவில் தொழில்வாய்ப்புப் பெற்றுத்தருவதாக அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பெண்களை விபச்சாரத்தில் தள்ளி வந்த 32 வயது இலங்கையர் ஒருவரது தலைமையின் கீழான குழுவொன்றைக் கைது செய்துள்ள மலேசியா பொலிசார் 30 பேரை விடுவித்துள்ளதாக உள்ளூர் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவைச் சேர்ந்த 47 வயதுப் பெண்ணொருவருடன் இணைந்தே இச் செயலில் ஈடுபட்டு வந்த குறித்த நபரோடு எண்மர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW