இந்தியா – சீனாவின் உதவி கட்டாயம் தேவை: நிமல்
இலங்கையின் அபிவிருத்திக்கு இந்தியா மற்றும் சீனாவின் உதவி கட்டாயம் தேவையென தெரிவித்துள்ளார் அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா.
நேற்றைய தினம் பாராளுமன்றில் வைத்து கருத்துரைத்த போதே இவ்வாறு தெரிவித்த அவர், எதிர்க்கட்சியினர் அரசாங்கம் ஏன் இரு நாடுகளையும் அரவணைக்க முயல்கிறது என கேள்வி கேட்கின்றனர். எமது நாட்டின் அபிவிருத்தி இரு நாடுகளின் ஒத்துழைப்பும் இன்றியமையாதது எனவும் இந்நாடுகளின் ஒத்துழைப்பின்றி அபிவிருத்தி நடவடிக்கைளை முழுமைப் படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.