கருணா அம்மான் கைது
அரச வாகன துஷ்பிரயோக விடயம் தொடர்பாக நிதி மோசடிப்பிரிவில் வாக்குமூலம் அளிக்கச் சென்றிருந்த முன்னாள் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண பொறுப்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்ட கருணா அம்மான் அமைச்சுப் பதவியிலிருந்த போது கிடைக்கப் பெற்ற வாகனங்களை துஷ்பிரயோகம் செய்து வந்ததாக குற்றச்சாட்டுகள் இருந்து வந்த நிலையில் இன்று இக்கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.