தாராபுரம் குளம் விவகாரம் : அப்­துல்லாஹ் மஹ்ரூப், பைசல் காசிம், தெளபீக் ஆகி­யோ­ருக்கும் இடையில் கடும் வாக்­கு­வாதம்…!! சபையில் அமளிதுமளி ஏற்பட்டது முள்ளிநியூஸ்

தாராபுரம் குளம் விவகாரம் : அப்­துல்லாஹ் மஹ்ரூப், பைசல் காசிம், தெளபீக் ஆகி­யோ­ருக்கும் இடையில் கடும் வாக்­கு­வாதம்…!! சபையில் அமளிதுமளி ஏற்பட்டது


M.M.Minhaj

சபையில் மு.கா.-அ.இ.ம.கா. வாக்குவாதம்

மன்னார் தாரா­புரம் குளம் விவ­காரம் தொடர்பில் அரசின் பங்­காளி கட்­சி­களான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் எம்.பி.க்­க­ளுக்­கி­டையே சபையில் வாக்­கு­வாதம் ஏற்­பட்­டது.

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸையும் கடு­மை­யாக விமர்­சித்த அப்­துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி.யின் பேச்சை அடுத்தே சர்ச்­சை­யான வாக்­கு­வாதம் ஏற்­பட்­டது.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை 2017 ஆம் ஆண்­டுக்­கான வரவு– செலவுத் திட்­டத்தில் கமத்­தொழில், நீர்ப்­பா­சனம், அமைச்­சுக்­க­ளுக்­கான செல­வினம் தொடர்­பான குழு நிலை விவா­தத்தின் போதே சர்ச்சை ஏற்­பட்­டது.

இந்த விவா­தத்தின் போது அப்­துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி. உரை­யாற்­று­கையில்,

மன்னார் தாரா­குளம் புனர்­நிர்­மா­ணத்­திற்கு 150 மில்­லியன் ரூபா ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. 1990 ஆம் ஆண்டு யுத்த வடுக்­களால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு 150 மில்­லியன் ரூபா போது­மா­னதா? எனினும் இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் முஸ்லிம் காங்­கி­ரஸும் தவ­றான கருத்­துக்­களை முன்­வைக்­கின்­றனர்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் முஸ்லிம் காங்­கி­ரஸும் ரக­சிய இணக்­கத்­தையும் தொடர்­பையும் கொண்­டுள்­ளனர். அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் செயற்­பா­டு­களை கண்டு கிலியடைந்துள்ளனர் என்று கூறிய போது சபையில் கோஷமும் குழப்­பமும் ஏற்­பட்­டது.

முஸ்லிம் காங்­கி­ரஸின் எம்.பிக்­க­ளான பைஸல் காசிம், தௌபீக் ஆகியோர் அப்­துல்லாஹ் மஹ்­ரூபின் உரைக்கு இடை­யூறு விளை­வித்­தனர்.

இதன்­போது சபைக்குள் ஓடி­வந்து முஸ்லிம் காங்­கிரஸ் உறுப்­பி­னரும் பிரதி அமைச்­ச­ரு­மான பைசல் காசிம் கூறு­கையில்,

அப்­துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி. தவ­றான கருத்தை முன்­வைக்­கின்றார். தாராபுரம் குளம் நிர்­மா­ணத்­திற்கு நான் தடை விதிக்­க­வில்லை. தவ­றான கருத்தை சபை முன்­வைக்க வேண்டாம் என்றார்.

இதன்­போது அப்­துல்லாஹ் மஹ்ரூப், பைசல் காசிம், தெளபீக் ஆகி­யோ­ருக்கும் இடையில் கடும் வாக்­கு­வாதம் ஏற்­பட்­டது.

அப்­துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி. சார்ள்ஸ் நிர்­ம­ல­நா­தனை கடு­மை­யாக விமர்­சித்­தி­ருந்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸை இகழ்ந்து பேசி­ய­மையால் பைசல் காசிம் கடு­மை­யாக சீற்­ற­முற்று தனது எதிர்ப்பை வெளி­யிட்டார்.

அப்­துல்லாஹ் மஹ்­ரூபின் உரைக்கு முன்னர் ரிஷாத் பதி­யு­தீன், நீர்ப்பாசன அமைச்சர் விஜித் விஜ­ய­முனி சொய்ஸாவின் ஆச­னத்­திற்கு அருகில் சென்று தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் பக்கம் கை அசைத்­த­வாறு பேசிக் கொண்­டி­ருந்தார். இதன் பின்னர் அப்­துல்லாஹ் மஹ்ரூப் அமர்ந்­தி­ருந்த ஆச­னத்­திற்கு சென்று அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் ஏதோ கதைத்து கொண்­டி­ருந்தார்.

இதன் பின்­னரே அப்­துல்லாஹ் மஹ்ரூப் உரை­யாற்­றினார்.

இதன்பின்னர் இடம்பெற்ற அவரின் உரையின்போதே சர்ச்சை ஏற்­பட்­டது.
அப்துல்லாஹ் மஹ்ரூபின் சர்ச்சையான உரை நிகழ்வடைந்த பின்னர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், பைசல் காசிம், தெளபீக் ஆகிய இருவரும் அமர்ந்திருந்த ஆசனத்திற்கு சென்று இரு கைகளையும் அசைத்து ஏதோ பேசிக் கொண்டார்.


செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW