கிண்ணியா பொலிஸ் உத்தியோகத்தார் நஞ்சருந்தி தற்கொலை முயற்சி

(இஹ்ஸானா-பரீத்)
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பொலிஸ் பிரிவில் பொலிஸ் உத்தியோகத்தராக
கடமையாற்றி வரும் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை முயற்சி யொன்று தோல்வியில் முடிந்ததுள்ளது.
இச்சம்பவம் 19 சனிக்கிழமை காலை இடம்பெற்றதாக கிண்ணியா தள வைத்திய சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வெளியூர் மாவட்டத்தினைச் சேர்ந்த இவ் உத்தகயோகத்தர் எதற்காக நஞ்சருந்தி தற்கொலை முயற்சியை மேற்கொள்ள முயன்றார். என்ற விபரம் தெரியவில்லை.
நஞ்சருந்திய இவரை உடனடியாக கிண்ணியா தள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார் .