திருகோணமலை கடற்கரையில் பெருமளவு மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கிவருகிறது. முள்ளிநியூஸ்

திருகோணமலை கடற்கரையில் பெருமளவு மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கிவருகிறது.


பூச்சக்கன்னி (சிங்களத்தில் போலோ) எனப்படும் பெருமதியான மீன் இனத்தைச் சேர்ந்த மீன்களே இவ்வாறு கரையோதுங்குகிறது.

சுமார் 20 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான மீன்கள் இதுவரை இறந்த நிலையில் கரையோதுங்கியுள்ளதாக இப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கான காரணத்தை கடற்றோழில் திணைக்கள அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

மேலும் நேற்று 2 ம் திகதி 10 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான மீன்கள் கரைவலை மூலம் பிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அனுப்புனர் கிண்ணியா
இஹ்ஸனா.பரீத்

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW