Special news : அடங்கியே ஆக வேண்டும் : முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்படுபவர்களுக்கு எதிராக ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து நடவடிக்கை !! உயர் மட்டக் குழுக்கள் நியமனம் முள்ளிநியூஸ்

Special news : அடங்கியே ஆக வேண்டும் : முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்படுபவர்களுக்கு எதிராக ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து நடவடிக்கை !! உயர் மட்டக் குழுக்கள் நியமனம்



உயர் மட்ட குழுக்களும் நியமனம்
முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அண்­மைக்­கா­ல­மாக மீளவும் தலை­யெ­டுத்­துள்ள இன­வாத செயற்­பா­டுகள் தொடர்பில் அர­சாங்கம் தீவிர கவனம் செலுத்­தி­யுள்­ளது.

இதற்­க­மை­வாக ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் தலை­மையில் சிரேஷ்ட அதி­கா­ரி­களை உள்­ள­டக்­கிய குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­துடன் இக் குழு அண்­மைக்­கா­ல­மாக நடை­பெற்று வரும் சம்­ப­வங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை ஒன்­றையும் விரைவில் சமர்ப்­பிக்­க­வுள்­ளது.

இதே­வேளை பெளத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்­தவ சம­யங்­க­ளுக்குப் பொறுப்­பாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள அமைச்­சர்­களை உள்­ள­டக்கி மற்­று­மொரு குழுவும் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

இக் குழு தத்­த­மது சமூக பிர­தி­நி­தி­க­ளுடன் கலந்­து­ரை­யாடி அறிக்கை ஒன்றை தயா­ரித்து ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருக்கு சமர்ப்­பிக்­க­வுள்­ளது.

இனங்­க­ளுக்கும், சம­யங்­க­ளுக்­கு­மி­டையில் நிலவும் முரண்­பா­டு­க­ளையும், சந்­தே­கங்­க­ளையும் களைந்து நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள அமைச்­சர்கள் குழுவின் உறுப்­பி­ன­ரான முஸ்லிம் சமய விவ­காரம் மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் முஸ்லிம் சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­க­ளையும் மதத்­த­லை­வர்­க­ளையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடாத்­த­வுள்ளார்.

அண்மைக் கால­மாக தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வந்த முஸ்லிம் சமூ­கத்­துக்­கெ­தி­ரான நட­வ­டிக்­கைகள் தொடர்பில் முழு­மை­யான விப­ரங்­களைத் திரட்­டு­வ­தற்­கா­கவே இச்­சந்­திப்பு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக அமைச்சர் ஹலீம் தெரி­வித்தார்.

முஸ்லிம் சமூ­கத்தின் மீதான வெறுப்புப் பேச்­சுக்கள், முஸ்லிம் தனியார் சட்டத் திருத்­தத்­திற்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட ஆர்ப்­பாட்டம், அதில் தெரி­விக்­கப்­பட்ட கருத்­துக்கள், குரு­நாகல் மாவட்­டத்தில் இடம்­பெற்ற பள்­ளி­வாசல் தாக்­கு­தல்கள், பெப்­லி­யா­னவில் பெஷன்பக் நிறு­வ­னத்தில் ஏற்­பட்ட தீவி­பத்து, கண்­டியில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட ஆர்ப்­பாட்டம் என்­பன பற்றி கலந்­து­ரை­யா­டப்­பட்டு அவற்­றுக்­கான தீர்­வுகள் பற்றி ஆலோ­சிக்­கப்­ப­டு­மெ­னவும் அமைச்சர் ஹலீம் தெரி­வித்தார்.

இந்து சமய விவ­கார அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன், கிறிஸ்­தவ சம­ய­வி­வ­கார அமைச்சர் ஜோன் அம­ர­துங்க, மற்றும் அமைச்சர் கபீர் ஹாஷிம் ஆகி­யோ­ருடன் ஜனா­தி­ப­தி­யையும், பிர­த­ம­ரையும் சந்­தித்து இது தொடர்பில் முன்­னெ­டுக்க வேண்­டிய நட­வ­டிக்­கைகள் பற்றி கலந்­து­ரை­யா­டி­யுள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.

இதே­வேளை பொலிஸ் திணைக்­க­ளத்­திலும் இன­வாத செயற்­பா­டுகள் தொடர்­வதைக் கட்­டுப்­ப­டுத்­தவும் இன­வா­தத்தை பரப்­பு­வோரை கண்­ட­றிந்து உடன் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கவும் விசேட பிரி­வொன்று ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர தெரி­வித்­துள்ளார்.

இதற்­கி­டையில் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு ஐ.எஸ். அமைப்­புடன் தொடர்­பி­ருப்­ப­தாக நீதி­ய­மைச்சர் கடந்த வாரம் பாரா­ளு­மன்றில் வெ ளியிட்ட கருத்­தினை அர­சாங்கம் முற்­றாக மறுத்­துள்­ள­துடன் முஸ்லிம்களுக்கு எந்தவித தீவிரவாத குழுக்களுடனும் தொடர்பில்லை என்பதை பாதுகாப்புக் கவுன்சில் உறுதிப்படுத்தியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW