திருகோணமலை வெள்ளைமணல் புர்கான் பாலர் பாடசாலையின் கலை விழா
திருகோணமலை வெள்ளைமணல் சின்னபிள்ளைச்சேனை புர்கான் பாலர் பாடசாலையின் கலை விழா, திருகோணமலை வெள்ளைமணல் சின்னபிள்ளைச்சேனை புர்கான் பாலர் பாடசாலையின் கலை நிகழ்வும் பரிசளிப்பும் விழா நேற்று 12.12.2016 பி.ப.3.00 மணியளவில் சின்னப்பிள்ளை சேனை அல் புர்கான் மகா வித்தியாலய முன்றலில் இடம்பெற்றது . குறித்த நிகழ்வை கிராமிய அபிவிருத்தி சங்க தலைவர் பலீல் தலைமையில் நடைபெற்றது.
அந் நிகழ்விற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வர் பிரதம அதீதியாகவும், கெளரவ விருந்தினர்களாக புர்கான் வித்தியாலய அதிபர் ஹைதர் அலி,கிங்டன் கல்லூரியின் தலைவர் ரிபான்,மற்றும் இளைஞர் விளையாட்டு கழக தலைவர் நௌபர் போன்றோர் களும் உட்பட பலரும் கலந்துகொண்டு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி கெளரவித்தனர்.
(இஹ்ஸானா- பரீத்)