யாழில் குடும்ப பெண் ஒருவர் வெட்டிக் கொலை முள்ளிநியூஸ்

யாழில் குடும்ப பெண் ஒருவர் வெட்டிக் கொலை



யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியிலுள்ள பொற்பகுதி, குடத்தனை கிராமத்தில் வீட்டில் உறங்கி கொண்டிருந்தப் பெண் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

62 வயதான தங்கவேலாயுதம் கமலாதேவி என்ற பெண்ணே நேற்றிரவு 11 மணியளவில் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெண்ணின் கணவர் நோயாளி என்பதால் அவர் நேற்றிரவு தூக்கமாத்திரை உட்கொண்டு விட்டு நித்திரைக்கு சென்றதால் இரவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அறிந்திருக்கவில்லை.

பெண்ணின் கழுத்தில் கத்தியால் வெட்டியுள்ள நபர்கள் பெண் அணிந்திருந்த தங்க நகைகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

பெண்ணின் சடலம் பருத்திதுறை அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், கொலை தொடர்பான விசாரனைகளை மோப்பநாய் உதவியுடன் முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW